சத்தம் செய்யாதீர் -இங்கு
எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்
தாயின் கருவறையில் இருந்து பிறந்த
இவர்கள் தாய் மண்ணின் கருவறையில்
துயில்கின்றனர்
சத்தம் செய்யாதீர்கள் -இங்கு
எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்
சாவுக்கே சாகசம் காட்டிய வித்தகர்-இவர்கள்
சாவைகண்டும் அஞ்சதா வீரமறவர்கள்
தாய் நாட்டிற்காக தம்மையே தந்த
சத்திய புருசர்கள் இவர்கள்
சத்தம் செய்யாதீர்கள் -இங்கு
எங்கள் குழந்தைகள் துயில்கின்றனர்
கரிகாலனின் களச்சேனைகள்-இவர்கள்
அண்ணன் சொல்லையே வேதமாக
தமிழ்த் தாயகமே தம் லட்சியமாக கொண்ட
வரிப்புலிகள்-இவர்கள் சாவடைய வில்லை
இங்கு வாழ்கின்றார்கள் ..
இம்மண்ணில் துயில்கின்றார்கள்
எங்கள் குழந்தைகள்
சத்தம் செய்யாதீர்கள் !!
+
-:ஓவியன்:-
3 comments:
@@@தாயின் கருவறையில்
இருந்து பிறந்த
இவர்கள் தாய் மண்ணின் கருவறையில் துயில்கின்றனர்@@@
அழகான வரிகள் தொடர்ந்து எழுதுங்கள்
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ...
அன்புடன் தோழி
நந்தா
நன்றி நந்தா
உங்கள் வருகையை இட்டு மகிழ்ச்சி எனக்கு
ஓவியன்
சொல்லுவதற்கு
வார்த்தைகளே இல்லை
Post a Comment